ஊர்ல படம் ரிலீஸ் ஆகாததாலே ஒரு மொழி பெயர்ப்பு படத்துக்கு நம்ம பதிவுலகமும் பத்திரிகை உலகமும் இப்படித்தான் விமர்சனம் எழுதும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்டது .
ஹிந்தியில் சக்கைப்போடு போட்ட ஜப் வி மெட் படத்தோட தமிழ் பதிப்பு .அப்படியே காப்பி அடிக்காம தமிழ் நேட்டிவிட்டிக்கு ஏத்த மாதிரி மாத்தி எடுத்திருக்காங்க (ஆமா ஹிந்தி டயலாக்கையெல்லாம் தமிழுக்கு மாத்தி இருக்காங்க )
ஆனா ஷாகித் கபூருக்கும் கரீனா கபூருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி இந்த படத்தில்பரத்துக்கும் தமனாவுக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .அந்த கோடீஸ்வரன் பாத்திரத்துக்கு பரத் சுத்தமாக பொருந்த வில்லை .அதே போல் கரீனாவோட வெகுளித்தனமும் துடுக்குத்தனமும் தமனாவிடம் மிஸ்ஸிங் .
கதை என்னமோ ஒரு ரயில் பயணத்துல சந்திக்கிற இரு வேறுபட்ட நபர்களுக்கிடையே உள்ள உறவைப் பற்றியதுதான் .படத்தின் பின்பாதி பெண்ணுடன் வந்தவனை அவளின் காதலனாக என்னும் 'பூவேலி ' டைப் கதைதான் .
ஜெயம் கொண்டான் எனு ஒரு தரமான படத்தை கொடுத்த இயக்குனர் கண்ணன் ஏன் ரீமேக் படம் எடுக்க முன் வந்தார்னு தெரியல ,ஆனாலும் தன் பங்கை மிக சிறப்பாகவே செய்திருக்கிறார்.நமது முதல் பாராட்டு கேமரா மேன் முத்தையவுக்குத்தன் ,இரவு நேர ரயில் காட்சிகளையும் தேனியையும் படம் பிடித்த விதம் மிகவும் அருமை. வித்யா சாகரின் இசை 'ஒரு நாள் இரவில்' பாடலில் மட்டும் தெரிகிறது .
சந்தானம் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் .நிழல்கள் ரவி ,அழகம் பெருமாள் ,தீபா வெங்கட் மற்றும் மனோ பாலா வந்து போகிறார்கள் .
Sun Picture- சின் வியாபார யுக்தி கண்டேன் காதலை காண வைத்துவிடுமேனே தோன்றுகிறது.
October 31, 2009 at 11:59 AM
ippadiyum eluthalaama vimarsanam nalla irunga