அன்று வீட்டுக்குள் நுழைந்தவுடனே
சமையற்கட்டிலிருந்து குரல்
"உங்களை கல்யாணம் கட்டியதிலிருந்து
என்ன சொகத்தை கண்டேன்
ஒரு பட்டு புடவை வாங்குவதற்கு
தீபாவளி பொங்கல்னு காத்து கிடக்க வேண்டியிருக்கு
ஒரு LCD TV வாங்கி வைங்கலேன்னு கேட்டா
அழுகிற சீரியல் பார்கிறதுக்கு
அம்புட்டு காசு எதுக்குன்னு நையாண்டி வேற
தியேட்டருல போயி ஒரு படம் பார்கிறதுக்கு
கம்யூட்டரை தட்டி கணக்கு பார்க்கிறீங்க
ஸ்கூல் பசங்களெல்லாம் iPhone, rPhone-ன்னு சுத்தும்போது
வீட்டிலேதானே இருக்க உனக்கு எதுக்கு செல்போனுன்னு
ஒரு காரணம் சொல்றீங்க
கல்யாணம் பார்டின்னு போட்டுக்கிட்டு போகிறதுக்கு
ஒரு நல்ல நகை கிடையாது
ஒரு ராணி மாதிரி வச்சிருந்த அப்பா அம்மாவை விட்டுட்டு
உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணின பாவத்துக்கு
நீ செய்த நல்லதுதான் என்ன?"
இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தாலும்
அந்த வார்த்தை வந்தே விட்டது
"போடி போ உங்க அப்பன் வீட்டுக்கே போயிடு "
"ஏன் சொல்ல மாட்டீங்க முப்பது வருசத்துக்கப்புறம்
இவ எங்க நம்மை விட்டு போகப்போறானு தைரியம் "
என்று சொல்லிக்கொண்டு கையில் கரண்டியோடு
வந்த மாமியார் என்னை பார்த்துவிட்டு
"ஹி ஹி வாங்க மாப்பிள்ளை "


பி.கு : இதை உரையாடல் கவிதை போட்டியில் சேர்க்கலாம்னு யாராவது சொல்லுங்கப்பா ..